Monday, May 24, 2010

லஞ்சத்தை ஒழிக்க உங்கள் உதவி தேவை



இந்த பதிவு லஞ்சத்தை ஒழிக்க போராடும் ஐந்தாவது தூண் பற்றியது. ஐந்தாவது தூண்-இது லாப நோக்கமில்லாத, அரசு சார்பற்ற ஒரு அமைப்பு. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவர்களை ஊக்குவிப்பதும், உதவி செய்வதும் இந்த அமைப்பின் நோக்கம்.

மக்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு லஞ்சம் இன்றி கிடைத்திட, அவர்களை ஊக்கபடுத்த துடிக்கும் ஒவ்வொரு குடிமகனையும்

ஐந்தாவது தூணில் இணைந்து செயலாற்ற வரவேற்கிறோம்.


மாவட்ட அளவிலும், சட்டசபை தொகுதி அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் அமைப்புகளை ஏற்படுத்திஉள்ளது..இந்த அமைப்புகள் உள்ளூர் அங்கத்தினரால் அமல்படுதபடுகிறது.

நாட்டின் அணைத்து இடங்களிலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ் புறத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் ஒரு stall நிறுவியுள்ளோம்.இங்கு zero rupee நோட்டை விநியோகித்து வருகிறோம்.ஒரு லட்சம் நோட்டுகளை அடித்துள்ளோம். குறைந்தது 30,000 மக்களிடம் தகவலை கொண்டுசெல்ல திட்டமிட்டுளோம். 22-5-10 தொடங்கி நாற்பது நாட்கள் ஸ்டால் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

ஐந்தாவது தூணில் சேர ஆர்வமுள்ளோர் நேரடியாக வரும்படி கேட்டுகொள்கிறேன்.


இடம்:
சாஸ்திரி மைதானம்,
ஆர்.எஸ் புறம்,
கோவை.

Others please contact:

41,circular road,united india colony,kodambakkam,Chennai-600024

Phone no: 044-65273056 / 9445164555

Email:endcorruption@5thpillar.org

Website:www.5thpillar.org

Coimbatore chapter:

5th pillar,

111,1st floor, iswarya complex,

Gopalapuram, Coimbatore-641018

Phone no:9600841045 / 9363126320

Email: cbe@5thpillar.org


நேற்று அங்கு volunteer ஆக சென்றேன். மக்களிடம் எடுத்துசொல்லும்போது நடந்த சில சுவாரசிய சம்பவங்கள்:

சில பேர் இந்த நோட்டை காசாக்கும்னு நினைச்சு வாங்க பயந்துட்டாங்க , அப்புறம் இலவசம்னு சொல்லி கொடுத்தேன்.

சில பேர் லஞ்சத்தை ஒழிக்க முடியாதுனு வாதாடினாங்க.

சில பேர் கோபபட்டாங்க ( அவங்க லஞ்சம் வாங்குறவங்க போல !!!!! )

சில பேர் கண்டுக்கவே இல்ல.

சில பேர் லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொன்னா எதுக்கு ஒழிக்கணும்னு கேக்குராங்க. ( அப்படி பழகிடுச்சு லஞ்சம் கொடுகிறது )

இதுவாவது பரவாஇல்ல, ஒருத்தன் சொன்னா பாருங்க பதில்,,,கூட நான்கு பெண்களுடன் வந்தான் (அவனுக்கு எதுக்கு மரியாத )
நான்: சார் அமைப்பில் சேருரிங்களா ??
அவன்: நா எதுக்கு சேருறேன், நானே அந்த காசுலதான் இப்படி செலவு பண்ணுறேன்.
நான்: !!!!! ( அப்படியே ஷாக் ஆயிட்டேன் )

மறக்காம ஓட்டு போடுங்க பலருக்கு தெரியவரும்,,,,,,,,